முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி நல்ல நடிகர் மக்களை நன்றாக ஏமாற்றி விட்டார் - பிரச்சாரத்தில் சோனியா காட்டம்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் மோடி நல்ல ஒரு நடிகர். அவர் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று குறிப்பிட்டார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 2 வருடங்களுக்கு பின் சோனியா காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். கர்நாடகாவின் பிஜப்பூர் தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்தார். அதில் மோடி அரசு கர்நாடக விவசாயிகளை ஏமாற்றி விட்டது. நாடு முழுக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் கர்நாடகாவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர் நன்றாக பேசுகிறார். ஆனால் வண்ணவண்ண பேச்சுக்களால் விவசாயிகளின் வயிறு நிறையாது. இந்தியாவிலேயே கர்நாடக விவசாயிகள்தான் மிகவும் குறைவான கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர் என்றார்.

மேலும் இதுவரை இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது.மோடி நன்றாக நடிக்கிறார், அவர் மிகவும் சிறந்த நடிகர்.மோடி வெளிநாடு சென்று பொய் சொல்கிறார். வரலாற்றை திரிக்கிறார். காங்கிரஸ் தலைவர்களின் பெயரை பயன்படுத்தி அவர் விளம்பரம் தேடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக மோடி எதுவும் செய்யவில்லை. ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு மோடி தேர்தலில் வாய்ப்பளித்துள்ளார். அவர் சித்தராமையா போன்ற ஊழல் குற்றவாளிகளுக்கு வாய்ப்பளித்துள்ளார். இதை மக்கள் முடிவிற்கு கொண்டு வர வேண்டும். கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.க.விற்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து