முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் துணிச்சலானவர்களால்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்: அதிபர் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்: யார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம். ஆனால், துணிச்சலானவர்களால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் நேற்று டிரம்ப் - கிம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசும் போது, வடகொரியாவுடனான கசப்புணர்வு மறைந்துள்ளது. அமெரிக்காவும், வடகொரியாவும் புதிய வரலாறு படைக்கத் தயாராக உள்ளது. ஏவுகணை தளங்களை அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. யாரும் போர் தொடங்கலாம். ஆனால் துணிச்சலானவர்களால்தான் அமைதியை உருவாக்க முடியும். அணுஆயுதங்களை அழிப்பதற்கு வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது. வடகொரியா தென் கொரியாவில் பிரிந்துள்ள குடும்பங்கள் விரைவில் ஒன்றிணையும். வெள்ளை மாளிகை வருமாறு வடகொரிய அதிபர் கிம்முக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து