எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்: மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் இதுகுறித்த திட்ட அறிக்கை முதல்வரிடம் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆலோசனை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் கூடிய அதி நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மத்திய,மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
மத்திய குழுவினர்...
மறைந்த முதல்வர் அம்மாவின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவவசதிகள் கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட ஒப்புக்கொண்ட மத்திய அரசு அதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக குழுவினரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. அதன்படி மதுரை தோப்பூர் உள்ளிட்ட 5 இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய குழுவினர் அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது.
மத்திய அரசு அனுமதி...
இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் 100 இடங்களை கொண்ட மருத்துவக் கல்லூரியுடன் 200ஏக்கரில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட அனுமதியளித்து மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
நேரில் ஆய்வு...
இதனிடையே தமிழகத்திலுள்ள இரண்டரை கோடி தென்மாவட்ட மக்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்றிடும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டதுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் மத்திய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் வரைபடத்தினை பார்வையிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான விளக்கங்களை மதுரை கலெக்டர் கொ. வீரராகவராவ் விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு ஆலோசனை...
இதை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்கள். பின்னர் அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் நடைபெற்றது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையை இரண்டு ஆண்டுகளுக்குள் விரைவாக அமைப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.
நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் (எ)செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாநில எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி எம்.எஸ்.பாண்டியன்,வில்லாபுரம் ஜெ.ராஜா, கு.திரவியம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி,தமிழ்ச்செல்வம், ஓம்கே.சந்திரன். முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் அன்பழகன், மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கட்சி நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன். கபிகாசிமாயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன். நெடுமாறன், பெரியசெல்வம், கேபிள் பார்த்தசாரதி, வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.மருதுபாண்டியன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பேட்டி...
ஆய்வுக்குப் பின் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலத்தில் முதல்முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் தான். இதற்கு முன்பாக பின்தங்கிய மாநிலங்களான பீகாரில் பாட்னாவிலும், ஒரிசாவில் புவனேஸ்வர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் தமிழகத்தில் தற்போது அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகள் கொண்டதாக செயல்படும்.
முதல்வர் உத்தரவு
இதற்கு தேவையான அரசு நிலம் 192.7 ஏக்கருக்கு தடையில்லாச் சான்று தயார் நிலையில் உள்ளது. 20 மெகாவாட் மின்சார இணைப்பு தயாராக இருக்கிறது. 5 எம்.எல்.டி தண்ணீர் வழங்கிட அனைத்து வசதிகளும் உள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடும் பணிகளை வேகமாக நடத்தி முடித்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகளும் அதற்கான துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அனைத்து வசதிகளும் முழுமைப்படுத்தப்படும்.
இன்று அறிக்கை தாக்கல்
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பான திட்ட அறிக்கை உடனடியாக தயாரிக்கப்பட்டு நாளையே (இன்று) முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தோப்பூர் பகுதியில் ஏற்கெனவே நான்குவழிச்சாலை இணைப்பு இருக்கிறது. இந்த இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளதால் தண்ணீர் பிரச்சனை வந்திட வாய்ப்பு கிடையாது. அத்துடன் ஐ.ஓ.சி நிறுவனம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் நூறு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமும் 750 படுக்கை வசதி கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது.
மல்டி ஸ்பெசாலிட்டி...
இதையடுத்து மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் தலா 150 கோடியில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு உலகவங்கி தற்போது ரூ.2685 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ள சுகாதாரத்துறையின் திட்டங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இத்தகைய சிறப்பு மிகு திட்டங்களால் சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.