முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பக்கரை அருவியில் விழுதுகள் இளைஞர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த கையெழுத்து இயக்கம்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நேற்று முன்தினம் தாமரைக்குளம் விழுதுகள் இளைஞர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தேவதானபட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். கும்பக்கரை அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழுதுகள் மன்ற தலைவர் ஆண்டிபட்டி பாண்டி, செயலாளர் சங்கிலிதுரை, பொருளாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மன்ற இளைஞர்கள் விளக்கி கூறினர். துணியால் ஏற்படுத்தப்பட்ட கையெழுத்து பதாகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கையெழுத்திட்டனர். இம்முகாமில் சமூக ஆர்வலர் தேனி சகாதேவன் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தாமரைக்குளம் விழுதுகள் மன்ற இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து