முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடு புதிய சட்டத்துக்கு எகிப்து அதிபர் ஒப்புதல்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

கெய்ரோ, எகிப்தில் சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு அதிபர் அப்தெல் பட்டா அல் - சிசி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சமூக வலை தளங்கள் மற்றும் சமூக ஊடக பயனாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் கடந்த ஜூலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது அந்த சட்டத்துக்கு அதிபர் அல்சிசி முறைப்படி தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஊடக ஒழுங்குமுறைக்கான கவுன்சில், 5,000 -க்கும் மேற்பட்ட பின்தொடருபவர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் அல்லது தனியார் பக்ககங்கள் அல்லது வலைதளங்களை கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தை மீறி வன்முறை அல்லது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொய்யான செய்திகள் மற்றும் தகவல்களை வெளியிடும் அனைத்து விதமான வலைதளம் அல்லது தனி நபர் கணக்குகளை முடக்கும் அதிகாரம் அந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து