முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்த இந்தியா - அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : லட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என்று அமெரிக்க அதிபர்  டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில் டிரம்ப் பேசுகையில்,

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சுதந்திரமான சமூகத்தை கொண்டது. வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கானோரை வெற்றிகரமாக இந்தியா மீட்டெடுத்துள்ளது என்று தெரிவித்தார். ஐ.நா. பொது சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில் டிரம்ப் பேசுவது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்கிய சீனா மீது அமெரிக்கா சில தடைகளை அண்மையில் விதித்தது. இதேபோல், ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 வான் பாதுகாப்பு சாதனம் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்கினால், இந்தியா மீதும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த போது, இந்தியாவை தாம் நேசிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். அதே போல், இந்தியா சுதந்திரமான சமூகத்தை கொண்டது என்று டிரம்ப் தற்போது புகழாரம் சூட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து