முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத ரீதியாக காவல் துறையை பிளவுபடுத்த முயற்சி: பினராயி விஜயன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள மாநில காவல் துறையை மத ரீதியாக பிரிக்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநில காவல் துறை உருவான தினத்தையொட்டி, திருவனந்தபுரத்தில்   நடைபெற்ற காவல் துறை பணியாளர்களின் நிகழ்ச்சியில் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்காக, ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் மனோஜ் ஆபிரஹாம், ஸ்ரீஜித் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல் துறையை மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். காவல் துறையினரிடத்தில் மத ரீதியிலான தாக்குதலில் ஈடுபட்டு அவர்களை தனிமைப்படுத்த நினைக்கின்றனர்.

அவ்வாறுசெய்பவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அத்தகைய செயல்கள் மீண்டும் தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.காவல் துறை அதிகாரி ஆபிரஹாம் மீது சைபர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து