முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ல் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

பியூனஸ் அயர்ஸ் : வரும் 2022-ஆம் ஆண்டில் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2022-ல் ஜி 20 மாநாட்டை இத்தாலி நடத்துவதாக இருந்தது. இந்தியாவுக்காக அந்நாடு அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளது. அந்த ஆண்டில் இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் என்பதால் மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்றார்.

ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன்-ஜங்க்கர், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் உள்ளிட்டோரை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து