முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பேன்: இளமைக் காலம் குறித்து பிரதமர் மோடி தகவல்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தனது இளமை காலம் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, வருடத்தில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். பேஸ்புக்கின் பிரபல பக்கமான ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுடன் பிரதமர் மோடி தனது இளமைகால வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மனதுக்கு இதம்

அதில் தனது இளம் வயதில் இமயமலைக்கு புனித பயணம் மேற்கொண்டதாகவும், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து திரும்பியவுடன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் 5 நாட்கள் வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருப்பேன் என்றும், அங்குள்ள சுத்தமான தண்ணீர், மக்கள் யாரும் இல்லாத அமைதியான சூழல் மனதுக்கு இதம் அளிப்பவையாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

பணிகளை செய்வேன்

வனப்பகுதியில் இருக்கும் போது வானொலி, செய்தித்தாள், இணையதளம் போன்றவற்றை பயன்படுத்துவது கிடையாது என்று தெரிவித்துள்ள மோடி, 5 நாட்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து சென்று விடுவதாகவும், ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தங்கியிருந்த போது டீ, உணவு தயாரிப்பது, அலுவலகத்தை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை தாமே செய்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து