முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

மியாமி, அமெரிக்காவில் உள்ள வங்கியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணமான புளோரிடாவில் செப்ரிங் என்ற நகர் உள்ளது. இந்த நகரில் இயங்கி வரும் வங்கி ஒன்றிற்குள் புகுந்த 21-வயது இளைஞர் ஒருவர், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்ற மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார், இந்த கொலைக்கு எதுவும் பிண்ணனி காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் துப்பாக்கி வன்முறையால் 40 ஆயிரம் பேர் அமெரிக்காவில் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து