முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாவின் 50-வது நினைவு நாள்: பிப். 3-ம் தேதி நினைவிடத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மலரஞ்சலி

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, அண்ணாவின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு வரும் 3ம் தேதி அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாநினைவிடத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களும், எம்.பிக்கள் எம்எல்ஏக்கள் , முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.பி.களும் எம்.எல்.ஏ.க்களும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 3ம் தேதி ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து