முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜ.க.வை நடத்த வேண்டும்: அமித்ஷா

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜ.க.வை நடத்த வேண்டும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில், தீனதயாள் உபாத்யாயா நினைவு தினத்தையொட்டி, பா.ஜ.க. ஊழியர்கள் கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் அமித் ஷா பேசியதாவது:-

தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜ.க.வை நடத்த வேண்டும். தொண்டர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை கட்சிக்கு தர வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 பேராவது, தலா ஆயிரம் ரூபாயை பிரதமரின் ‘ஆப்’ மூலமாகவோ, காசோலை மூலமாகவோ நன்கொடையாக அளிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு, பண முதலைகள், கட்டுமான அதிபர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் நன்கொடையை சார்ந்து இருந்தால், நமது லட்சியம் களங்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து