முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசேனாவில் இணைந்தார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளார். தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்ற அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்து உள்ளார். சில நாட்களுக்கு முன் மதுராவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் போது சில காங்கிரஸ் நிர்வாகிகள் அவரிடம் தவறாக நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் நீக்கப்பட்டு, பின்னர் தேர்தலுக்காக மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து