எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார். மேலும் முகவர்கள் செல்போன் கொண்டுவர அனமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மின்னணு பரிமாற்றம்...
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
நடந்து முடிந்த 38லோக்சபா தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி துவங்கப்படும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகளின் விரைவு மதிப்பீட்டுக் குறியீடு சரிபார்ப்பு (Qr-code) முடிந்தவுடன் அவை அஞ்சல் வாக்குகள் எண்ணும் மேசைக்கு அனுப்பப்படும்.
தபால் வாக்குகள்...
ஒவ்வொரு லோக்சபா தொகுதியும் 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை துவங்கும். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8. மணியளவில் துவங்கும். இடைத் தேர்தல் நடைபெற்ற 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்குப் பிறகு துவங்கும்.
ஒப்புகை சீட்டுகள்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள வாக்கு எண்ணும் பணி முன்னரே திட்டமிட்டபடி, சுழற்சி முறையில் நடைபெறும். கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள மின்கலம் இயங்காத நிலையில், மாற்று மின்கலம் பொருத்தப்பட்டு எண்ணிக்கை பணி தொடரும். கட்டுப்பாட்டுக் கருவியிலிருந்து முடிவுகளைப் பெற முடியாத நிலையில், அக்கருவி, தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, மற்ற மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைப் பணி முடிவுற்ற பின்னர் அக்கட்டுப்பாட்டு கருவியின் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.
சரிபார்க்கும் பணி...
இந்தியத் தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்களின்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக்காக காத்திராமல் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். தேர்தல் முடிவு அறிவிப்பின் போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி பின்வரும் முறையில் நடைபெறும்: மின்னணு வாக்குப் பதிவுக்குரிய கட்டுப்பாட்டுக் கருவியின் மின்கலம் மாற்றப்பட்ட நிலையிலும் முடிவுகளைப் பெறமுடியாத சூழல் ஏற்படும்போது;
மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருந்தால்; கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள வாக்கு எண்ணிக்கையும், படிவம் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையும் வேறுபடும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகமாக இருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலாயின், கட்டுப்பாட்டுக் கருவி குறிப்பிட்ட ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும்.
குலுக்கல் முறையில்...
மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியில் எடுக்காமல் இருந்தால், வாக்காளர் வாரியாக சான்றொப்பமிட்ட மாதிரி வாக்குப் பதிவின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56-க்கு உட்பட்டு தேர்தல் அலுவலரால் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டால்; சரிபார்ப்புக்காக தோராயமாக தெரிந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடி மையங்களின் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுப்பது குலுக்கல் முறையில் நடைபெறும்.
எழுத்து பூர்வமாக...
வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றின் போது, மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் பணிக்கான இயந்திரங்களைத் தேர்வு செய்வது குலுக்கல் முறையில், தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56க்குட்பட்டு நடைபெறும். குலுக்கல் முறையில் தெரிவு செய்வது குறித்து வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்து பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.
அஞ்சல் அட்டை அளவிலுள்ள வெள்ளை நிற காகித அட்டைகள் குலுக்கலுக்கான தேர்வுமுறைக்குப் பயன்படுத்தப்படும். சட்டசபை தொகுதியின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெள்ளை நிற காகித அட்டைகளின் எண்ணிக்கையும் இருக்கும். மேலே பத்தி 7-ல் (அ) முதல் (ஈ) வரையுள்ள காரணங்களுக்கான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணும் பணிக்குரிய இயந்திரங்கள் குறித்த விவரம் குலுக்கல் முறையில் நடத்தப்படும் அட்டைகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
காகித அட்டைகள்...
சட்டசபை தொகுதி / லோக்சபாதொகுதி எண் மற்றும் பெயர், வாக்கு நடைபெற்ற நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் 1 அங்குல நீளம் அகலத்துடன் கூடிய அச்சிடப்பட்ட காகித அட்டைகள் குலுக்கலுக்குப் பயன்படுத்தப்படும். இந்த காகித அட்டைகள் நான்கு மடிப்புகளாக மடிக்கப்படுவதால் உள்ளே வாக்குச்சாவடி எண் வெளியில் தெரியாது. ஒவ்வொரு காகித அட்டையையும் மடித்து பெட்டிக்குள் செலுத்துவதற்கு முன் வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் காண்பிக்கப்படும் தேர்தல் அலுவலரால் 5 காகித அட்டைகளைத் தெரிவு செய்வதற்கு முன் அதற்கான பெட்டி நன்கு குலுக்கப்படும்.
ஒப்புகைச் சீட்டு...
வாக்கு எண்ணிக்கை மையத்தில், அமைக்கப்பட்ட "வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுவதோடு மேலே பத்தி 8-ல் ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணிக்கான (அ) முதல் (ஈ) குறிக்கப்பட்டுள்ள பணிகள் முதலில் நடைபெறும். அதனையொட்டி மற்ற 5 வாக்குச் சாவடிகளுக்கான ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெறும். இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறி அடித்து ஓட்டம்
18 Sep 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.