எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார். மேலும் முகவர்கள் செல்போன் கொண்டுவர அனமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மின்னணு பரிமாற்றம்...
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
நடந்து முடிந்த 38லோக்சபா தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி துவங்கப்படும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகளின் விரைவு மதிப்பீட்டுக் குறியீடு சரிபார்ப்பு (Qr-code) முடிந்தவுடன் அவை அஞ்சல் வாக்குகள் எண்ணும் மேசைக்கு அனுப்பப்படும்.
தபால் வாக்குகள்...
ஒவ்வொரு லோக்சபா தொகுதியும் 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை துவங்கும். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8. மணியளவில் துவங்கும். இடைத் தேர்தல் நடைபெற்ற 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்குப் பிறகு துவங்கும்.
ஒப்புகை சீட்டுகள்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள வாக்கு எண்ணும் பணி முன்னரே திட்டமிட்டபடி, சுழற்சி முறையில் நடைபெறும். கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள மின்கலம் இயங்காத நிலையில், மாற்று மின்கலம் பொருத்தப்பட்டு எண்ணிக்கை பணி தொடரும். கட்டுப்பாட்டுக் கருவியிலிருந்து முடிவுகளைப் பெற முடியாத நிலையில், அக்கருவி, தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, மற்ற மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைப் பணி முடிவுற்ற பின்னர் அக்கட்டுப்பாட்டு கருவியின் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.
சரிபார்க்கும் பணி...
இந்தியத் தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்களின்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக்காக காத்திராமல் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். தேர்தல் முடிவு அறிவிப்பின் போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி பின்வரும் முறையில் நடைபெறும்: மின்னணு வாக்குப் பதிவுக்குரிய கட்டுப்பாட்டுக் கருவியின் மின்கலம் மாற்றப்பட்ட நிலையிலும் முடிவுகளைப் பெறமுடியாத சூழல் ஏற்படும்போது;
மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருந்தால்; கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள வாக்கு எண்ணிக்கையும், படிவம் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையும் வேறுபடும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகமாக இருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலாயின், கட்டுப்பாட்டுக் கருவி குறிப்பிட்ட ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும்.
குலுக்கல் முறையில்...
மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியில் எடுக்காமல் இருந்தால், வாக்காளர் வாரியாக சான்றொப்பமிட்ட மாதிரி வாக்குப் பதிவின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56-க்கு உட்பட்டு தேர்தல் அலுவலரால் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டால்; சரிபார்ப்புக்காக தோராயமாக தெரிந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடி மையங்களின் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுப்பது குலுக்கல் முறையில் நடைபெறும்.
எழுத்து பூர்வமாக...
வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றின் போது, மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் பணிக்கான இயந்திரங்களைத் தேர்வு செய்வது குலுக்கல் முறையில், தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56க்குட்பட்டு நடைபெறும். குலுக்கல் முறையில் தெரிவு செய்வது குறித்து வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்து பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.
அஞ்சல் அட்டை அளவிலுள்ள வெள்ளை நிற காகித அட்டைகள் குலுக்கலுக்கான தேர்வுமுறைக்குப் பயன்படுத்தப்படும். சட்டசபை தொகுதியின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெள்ளை நிற காகித அட்டைகளின் எண்ணிக்கையும் இருக்கும். மேலே பத்தி 7-ல் (அ) முதல் (ஈ) வரையுள்ள காரணங்களுக்கான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணும் பணிக்குரிய இயந்திரங்கள் குறித்த விவரம் குலுக்கல் முறையில் நடத்தப்படும் அட்டைகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
காகித அட்டைகள்...
சட்டசபை தொகுதி / லோக்சபாதொகுதி எண் மற்றும் பெயர், வாக்கு நடைபெற்ற நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் 1 அங்குல நீளம் அகலத்துடன் கூடிய அச்சிடப்பட்ட காகித அட்டைகள் குலுக்கலுக்குப் பயன்படுத்தப்படும். இந்த காகித அட்டைகள் நான்கு மடிப்புகளாக மடிக்கப்படுவதால் உள்ளே வாக்குச்சாவடி எண் வெளியில் தெரியாது. ஒவ்வொரு காகித அட்டையையும் மடித்து பெட்டிக்குள் செலுத்துவதற்கு முன் வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் காண்பிக்கப்படும் தேர்தல் அலுவலரால் 5 காகித அட்டைகளைத் தெரிவு செய்வதற்கு முன் அதற்கான பெட்டி நன்கு குலுக்கப்படும்.
ஒப்புகைச் சீட்டு...
வாக்கு எண்ணிக்கை மையத்தில், அமைக்கப்பட்ட "வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுவதோடு மேலே பத்தி 8-ல் ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணிக்கான (அ) முதல் (ஈ) குறிக்கப்பட்டுள்ள பணிகள் முதலில் நடைபெறும். அதனையொட்டி மற்ற 5 வாக்குச் சாவடிகளுக்கான ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெறும். இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.