எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பு...
இந்திய அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 2-வது இடத்தை பிடித்தது. 1987, 1996, 2015 ஆகியவற்றில் அரை இறுதியில் தோற்றது. 12-வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3-வது உலகக்கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆல்டைம் அணி...
இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியை வைத்து சிறந்த அணியை (ஆல்டைம் பெஸ்ட் லெவன்) ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. ஆல்டைம் உலக அணிக்கு கபில்தேவ் கேப்டனாக உள்ளார். டோனி துணை கேப்டனாக இருக்கிறார். 11 பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலிக்கு இடமில்லை. அவர் 2 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார்.
உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த லெவன் வருமாறு:-
1. தெண்டுல்கர்
சச்சின் இல்லாத ஒரு இந்திய கனவு அணியை கற்பனை செய்ய முடியாது, 6 உலகக்கோப்பையில் (1992- 2011) விளையாடி 2278 ரன் (44 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 56.95 அதிகபட்சமாக 152 ரன் குவித்துள்ளார். 6 சதமும், 15 அரை சதமும் இதில் அடங்கும். உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 1996, 2003, 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்தார்.
2.கங்குலி
2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இவரும் சிறந்த தொடக்க வீரர் ஆவார். இலங்கைக்கு எதிராக 183 ரன் குவித்தது (1999) இன்றும் சாதனையாக இந்திய அணியில் உள்ளது. 3 உலகக்கோப்பை தொடரில் விளையாடி 1006 ரன் (21 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 55.88 ஆகும். 4 சதமும், 3 அரை சதமும் அடித்துள்ளார்.
3. ராகுல் டிராவிட்
3-வது வரிசையில் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை மேற்கொண்டவர். 1999 உலகக்கோப்பையில் ரன்களை குவித்தார். உலகக்கோப்பை தொடரில் 860 ரன் (21 இன்னிங்ஸ்) பெற்றார். இதில் 2 சதமும், 6 அரை சதமும் அடங்கும். சராசரி 61.42 ஆகும்.
4. மொகீந்தர் அமர்நாத்
1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை பெற்றார். திறமை வாய்ந்த ஆல்-ரவுண்டர். 254 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 21.16 ஆகும். 16 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
5. முகமது அசாருதீன்
3 உலகக்கோப்பைக்கு கேப்டனாக பணியாற்றியவர். இதில் 1996-ல் இந்தியாவில் நடந்த போட்டியில் அணியை அரை இறுதிக்கு கொண்டு சென்றவர். மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு பலம் சேர்த்தவர். 1987-ல் இந்திய அணி அரை இறுதியில் நுழைய காரணமாக திகழ்ந்தார். 8 அரை சதத்துடன் உலகக்கோப்பையில் 826 ரன்கள் எடுத்துள்ளார்.
6. யுவராஜ் சிங்
சுழற்பந்து ஆல்-ரவுண்டர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. தொடர் நாயகன் விருதை பெற்றார். 2003 மற்றும் 2011 உலககோப்பையில் சில ஆட்டங்களில் அதிரடியான ஆட்டம் மிகவும் பலன் அளித்தது. 3 உலகக்கோப்பையில் விளையாடி 738 ரன் எடுத்து உள்ளார். சராசசி 52.71 ஆகும். 1 சதமும், 6 அரைசதமும் அடித்துள்ளார்.
7.டோனி (துணைகேப்டன்)
இந்திய ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர். உலகின் சிறந்த கேப்டனில் ஒருவர். 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் உலககோப்பையை பெற்றுக்கொடுத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். 2015-ல் அணியை அரைஇறுதி வரை அழைத்து சென்றார். உலககோப்பை தொடரில் 507 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42.25 ஆகும். 3 அரைசதம் அடங்கும். 27 கேட்ச் பிடித்துள்ளார். 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
8. கபில்தேவ் (கேப்டன்)
ஆல்-ரவுண்டர் திறமையில் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ல் அப்போதைய ஜாம்பவான் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி உலககோப்பையை வென்று பெருமை சேர்த்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்து சிறந்த அதிரடியை வெளிப்படுத்தினார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் இறுதிப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்சை நீண்ட தூரம் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்றும் மறக்க இயலாத ஒன்றாகும். 669 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.16 ஆகும். 28 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
9. ஸ்ரீநாத்
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவர் 1992, 1996, 1999 மற்றும் 2003 ஆகிய உலககோப்பையில் ஆடி உள்ளார். 34 ஆட்டத்தில் 44 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 30 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும்.
10. கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீரர் கும்ப்ளே. 1996 உலககோப்பையில் இவரது பந்துவீச்சு மிகவும் அதிரடியான இருந்தது. அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். 31 விக்கெட்டுகளை உலகக்கோப்பையில் கைப்பற்றினார்.
11. ஜாகீர்கான்
இந்திய அணியின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 2003 மற்றும் 2011 உலககோப்பையில் இவரது பங்களிப்பு சிறப்பானது. 23 ஆட்டத்தில் விளையாடி 44 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.
12-வது வீரராக தேர்வான விராட் கோலி 2 உலககோப்பையில் விளையாடி 587 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு