Idhayam Matrimony

இலங்கையின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன? சிறிசேனா விளக்கம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையின் தற்போதைய நிலைக்கு அதிபரின் அதிகார குறைப்பு நடவடிக்கையே காரணம் என்று சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அதிபராக சிறிசேனா 2015-ம் ஆண்டு பதவி ஏற்றார். அதன்பிறகு, அரசியல் சட்டத்தில் 19-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அதன்படி, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடனான மோதலால், அவரை நீக்கி விட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் சிறிசேனா நியமித்தார். இதனால், இரண்டு மாதங்களாக குழப்பநிலை நிலவியது.

இந்நிலையில், கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:-

இந்த அரசின் மிகப்பெரிய தவறு, 19-வது திருத்தம். அது, ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி விட்டது. நாம் ஸ்திரமற்ற அரசை நடத்தி வருவதாகவும், நானும், பிரதமரும் ஆளுக்கொரு பக்கம் அரசை இழுத்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்கு காரணம் 19-வது திருத்தம்தான்.இவ்வாறு அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து