முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ததால் துருக்கி நாட்டின்மீது அடுத்த வாரத்துக்குள் பொருளதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்தால் எப்-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். துருக்கி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31-ம் தேதி வரை கெடு விதித்திருந்தார்.

எப்-35 ரக போர் விமானம் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிக்காக அமெரிக்கா வந்துள்ள துருக்கி நாட்டு விமானிகளை அதற்கு மேல் எங்கள் நாட்டில் தங்கவிட மாட்டோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின்மீது விதிக்கப்படும் பொருளாதார தடை துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு குறிப்பிட்டிருந்தது. ரஷியாவிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி எஸ்-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களில் முதல் கவனை துருக்கி பெற்றுக் கொண்டது. இந்நிலையில், துருக்கி நாட்டின்மீது அடுத்த வாரத்துக்குள் பொருளதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து