முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோவில் திறமையானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது: சிவன்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இஸ்ரோவில் திறமையானவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெண்கள் தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் தரையிறங்குவதற்கான முயற்சியை ஆரம்பிக்கும். அப்போது அதன் வேகம் முற்றிலும் குறைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து