முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு ; மிதாலி ராஜ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான மிதாலி ராஜ், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36-வயதான மிதாலி ராஜ் 32 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார்.

ஓய்வு குறித்து மிதாலி ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். 2021 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில், நான் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன்.

எனது நாட்டுக்காக உலகக்கோப்பையை பெற்று கொடுக்க வேண்டும் என்பது எனவு கனவாகும். இந்த கனவை நிறைவேற்ற என்னால் இயன்ற அளவு கடுமையாக விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை அடித்த முதல் இந்தியராக மிதாலி ராஜ் உள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து