முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் 8 செ.மீ, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது 25 செ.மீ பொழிந்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு 36 செ.மீ மழை கிடைக்க வேண்டிய நிலையில் 42 செ.மீ மழை கிடைத்துள்ளது. இந்த தென்மேற்கு பருவமழையானது அக்டோபர் முதல் வாரம் வரை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து