எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய வரியையே செலுத்தலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னை மாநகராட்சியில் 1998-க்கு பின்னரும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2008-க்குப் பின்னரும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 1.4.2018 முதல் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசால் 19.7.2018ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், வாடகை அல்லாத சொந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும், பிற வகை கட்டடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன.
பின்னர் அரசு, 26.7.2018-ல் வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்திற்குமே சொத்து வரி 50 சதவீதத்திற்கு மிகாமல் உயர்வு செய்யப்படும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் 1.4.2018 முதல் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விரிவாக்கம் செய்யப்பட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் 4 நகராட்சிப் பகுதிகளில், ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் உள்ளது போன்றே திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின்படி சொத்து வரி உயர்வு செய்து சொத்து வரி விதிக்கப்பட்டது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகள் தவிர அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 1.4.2018-க்கு முன்பு குறைவான அளவீடு செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறு அளவீடு செய்யப்பட்டு, சொத்து வரி மறுநிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்து சொத்து வரி உயர்வினை குறைக்கக் கோரி கோரிக்கைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பெறப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில், நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கடந்த 8.7.2019அன்று உயர்த்தப்பட்ட சொத்து வரி சீராய்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவித்தேன்.
அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், நான் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவிப்பு செய்தபடி உயர்த்தப்பட்ட சொத்து வரி மறுபரிசீலனை செய்ய ஏதுவாக, அரசு நிதித்துறை (செலவினங்கள்) முதன்மை செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அடங்கிய 3 உறுப்பினர்கள் கொண்ட குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மறு கணக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் திருத்தப்பட்ட மண்டல அடிப்படி மதிப்பீட்டின்படி உயர்வு செய்யப்பட்ட சொத்துவரி, மிக அதிகமாக உள்ளதென பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் மீது அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரையில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில், சொத்து வரி சீராய்வுக்கு முன்னர், 1.4.2018 அன்று செலுத்தி வந்த அதே சொத்து வரியை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிட உரிமையாளர்கள் செலுத்தினால் போதும் எனவும், வரி விதிப்பாளர்கள் ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி அவர்களின் சொத்து வரி கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது உள்ளாட்சித்தேர்தல் காரணமாக சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்படுகிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சொத்துவரி உயர்வு நிறுத்தப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தமிழக சட்டமன்றத்திலும் பல தரப்பிலும் மக்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார். அதன் காரணமாக சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் உயர் அதிகாரிகளின் குழுவுக்கு காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் வேகமாக மறு ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ். பழனிசாமி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் உள்ளிட்ட அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்..!
16 Oct 2025சென்னை, தமிழக சட்டசபையில் கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
-
மீண்டும் மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி
16 Oct 2025சென்னை, உடல் நல குறைவுகாரணமாக நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை
16 Oct 2025புதுடெல்லி: பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வந்தார்.
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
16 Oct 2025ஜகர்த்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.