முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. தாயார் மறைவுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உசிலம்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நீதிபதியின் தாயார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:-

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான பா.நீதிபதியின் தாயார் முத்து பேயம்மாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.  பாசமிகு தாயாரை இழந்து வாடும் நீதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவி்த்துக் கொள்கிறோம். மேலும் மரணமடைந்தோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து