முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை  : வரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

 ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக    பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய   பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,  ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு   1.2.2020   முதல்   31.5.2020 வரை 120 நாட்களுக்கு 7776 மி.கன அடி நீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில்  கோபி, பவானி மற்றும் அந்தியூர்  வட்டம்  ஆகியவற்றில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்  என்பதை  நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து