முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.எம்.களில் ரூ.2000 நோட்டுக்கள் பயன்பாடு உள்ளதா ? இல்லையா ? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் பயன்படுத்த க் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியன் வங்கி தனது ஏ.டி.எம். களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதைக் குறைத்துக் கொண்டு அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடிப்பது குறைந்துள்ள நிலையில், பொதுமக்களிடையே ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்துள்ளது. மேலும், ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்தவரை, வங்கிகளுக்கு எந்தவொரு அறிவுரையும் வழங்கப்படவில்லை எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து