எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1125 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போருக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதே போல், மாநில அரசுகளும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி பொருள் உதவி அளிக்க வேண்கோள் விடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று, தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அறக்கட்டளைகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், PM-CARES நிதியத்திற்கும் அந்தந்த மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் விப்ரோ நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்துள்ளது. விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1125 கோடி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பினால் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


