முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது: அதிபர் புடின் தகவல்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷியாவில் கட்டுக்குள் உள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் கொரோனாவுக்கு 361 பேர் பலியாகி உள்ளனர். 42 ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதிதாக 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அந்த நாடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 10-வது இடத்தில் உள்ளது.இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்களை தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியபோது, ரஷியாவில் அனைத்து வி‌ஷயங்களும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்ததாக தெரிவித்தார். ஆனால் ரஷியாவில் தினமும் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து