முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்கத்தில் வரும் 26-ம் தேதி வரை சிறப்பு ரயில்களுக்கு தடை

சனிக்கிழமை, 23 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்திற்குள் சிறப்பு ரயில்கள் வருவதற்கு வரும் 26-ம் தேதி வரை அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்திற்குள் சிறப்பு ரயில்கள் வருவதற்கு வரும் 26-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய ஆம்பன் புயல் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியத்திற்கு மாநில தலைமைச் செயலாளர் ராஜீவா சின்கா கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், அடுத்த சில நாட்களுக்கு ரயில்களை பெறுவதற்கு சாத்தியம் இல்லை. எனவே, வரும் 26-ம் தேதி வரை எந்த ரயிலையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து