எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் கால் பதித்து பரவி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உலகளாவிய உயிர்ப்பலி தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்து விட்டது.
கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவர தடுப்பூசிதான் முக்கிய பங்கு வகிக்கும் என்று விஞ்ஞானிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி அல்லது மருந்துகளை தன்னார்வ காப்புரிமையின் கீழ் பெருமளவு தயாரித்து, எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதை ஏராளமான நாடுகள் மற்றும் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
இந்த நேரத்தில் டெல்லியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இம்மானுவேல் லெனைன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகமெங்கும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவதில் போட்டி போடுகின்றனர். இந்த தடுப்பூசியை அல்லது மருந்தை தயாரித்து உலகளவில் சமமாக வினியோகிக்கப்பட வேண்டும் என்றால், அதில் நாடுகளை ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியம் ஆகும். மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பெருமளவில் தயாரிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது.
உலகளவில் தடுப்பூசிகளை, பொதுவான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கொரோனா வைரசுக்கு ஒரு தடுப்பூசியை கண்டுபிடிக்க இந்தியாவில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தனித்தனியே திட்டங்களை வைத்துக் கொண்டு செயல்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய 2 நாள் மாநாட்டில் இந்த பிரச்சினை முக்கிய பிரச்சினையாக எழுந்தது. அங்கு பல நாடுகள் தடுப்பூசியை தயாரிக்கவும், அனைத்து நாடுகளுக்கு கிடைக்கச் செய்யவும் அழுத்தம் கொடுத்தன.
கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்ப்பதற்கான அனைத்து தயாரிப்புகளும் உலகளவில், சரியான நேரத்தில், சமமான அளவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற ஐரோப்பிய கூட்டமைப்பின் தீர்மானத்தை இந்தியாவும் பிரான்சும் ஆதரித்தன. மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான விரிவான நோய்த்தடுப்பு மருந்தை (தடுப்பூசியை) உலகளாவிய பொது நன்மையாக அடிக்கோடிட்டு காட்டின.கொரோனா வைரஸ் தொற்று வெடித்ததில் இருந்து, இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் ஒருங்கிணைந்த உலகளாவிய அணுகுமுறையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்தியா ஏற்கனவே 44 கோடியே 60 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளையும், 154 கோடி பாரசிட்டமால் மாத்திரைகளையும் 133 நாடுகளுக்கு வழங்கி உலகத்தலைவர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிறிங்கலா, கொரோனா வைரஸ் தொற்றுநோய், உலகின் மருந்தகமாக இந்தியாவின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டார்.சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற உலகின் எதிர்காலத்தை கட்டமைக்கும் முக்கிய பிரச்சினைகளை தனிமைப்படுத்தப்பட்ட முறையில் தீர்த்து விட முடியாது.இந்தியாவும், பிரான்சும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் சீர்திருத்தத்துக்கு பிரான்ஸ் ஊக்குவிக்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிப்பது மகிழ்ச்சி தருகிறது.நாம் இன்னும் பலவற்றை செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
12 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது.
-
செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதல்வர் வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோடா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இங்கு திறமையானவர்கள் இல்லை: ஹெச் -1பி நடைமுறையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப்
12 Nov 2025வாஷிங்டன் : வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் திறமையானவர் இல்லை என்றும், அதனால் ஹெச் -1பி விசா
-
கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
12 Nov 2025ஒண்டாரியா : கனடா அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
12 Nov 2025துபாய் : ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியலில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
அசாமில் நிலநடுக்கம்
12 Nov 2025திஸ்பூர் : அசாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
12 Nov 2025சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
-
தோட்டா தரணிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
12 Nov 2025சென்னை : டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஜிம்பாப்வே உள்ளிட்ட மேலும் 3 அணிகளை சேர்க்கிறது ஐ.சி.சி.
12 Nov 2025துபாய் : துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி.
-
எகிப்து: விபத்தில் 2 பேர் பலி
12 Nov 2025கெய்ரோ, எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
துருக்கியில் சோகம்: ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் பலி
12 Nov 2025திபிலீசி, ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


