முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2 டி.ஜி.பி.க்கள் இடமாற்றம்

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 2 டி.ஜி.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் ஏ.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். 

சென்னை காவல் ஆணையர் 3 ஆண்டுகள் பணி முடித்துள்ளார். டி.ஜி.பி. லட்சுமி பிரசாத், திருச்சி ஆணையர் வரதராஜு, ஏ.டி.ஜி.பி. மாகாளி உள்ளிட்ட பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.

அதன் முதல் கட்டமாக டி.ஜி.பி.க்கள் 2 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் ஏ.கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார். தமிழக சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர் சேட் உள்ளிட்ட 2 டி.ஜி.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறை செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக பதவி வகிக்கும் ஜாபர் சேட் உணவுப்பொருள் வழங்கல் கண்காணிப்புப் பிரிவு டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உணவுப்பொருள் வழங்கல் கண்காணிப்புப் பிரிவு டி.ஜி.பி.யாக பதவி வகித்து வரும் பிரதீப் வி பிலிப் சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து