முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்தானம் செய்த முதல்வர் எடப்பாடிக்கு தமிழிசை பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த செயலால் பொதுமக்களும் தானாக முன்வந்து கண் தானம் செய்வர் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை நேற்று முன்தினம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். 

இந்த நிலையில், கண் தானம் செய்ய உறுதி பாத்திரத்தில் கையெழுத்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கண் தானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் எனது கண்களை தானம் செய்ய உள்ளேன்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. 

முதல்வரின் இச்செயலால் பொது மக்களும் தானாக முன்வந்து தனது கண்களை தானம் செய்வர். இதனால் லட்சக்கணக்கான பார்வை இல்லாதவர்கள் பயன் பெறுவர்.

கண் தானம் செய்வதால் வெளிச்சம் இல்லாதவர்களின் வாழ்க்கையில் நாம் ஒளி ஏற்றலாம். எனவே அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து