எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தினமும் அதிக அளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. ஆனாலும் டெல்லி, கேரளா போல அதிக அளவில் பாதிப்புகள் பதிவாவது இல்லை. தமிழகத்தில் தினமும் 2000-க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டந்தோறும் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், மகளிர் சுயஉதவி குழுவினரையும் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து வருகிறார். அத்துடன் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில், கடந்த முறை 31 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர் மற்றும் பெரம்பலூரிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதனிடையே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


