முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் : நிதிஷ்குமார் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படும் என்று நினைத்து டெல்லியில் போராடும் விவசாயிகளின் அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அவர்கள் அவ்வாறு பேசும்போது குறைந்தபட்ச ஆதாரவிலை குறித்த தங்களின் பயம் தேவையற்றது என்று விவசாயிகள் புரிந்துகொள்வர்.

பீகாரில் கடந்த 2006-ம் ஆண்டிலேயே மண்டி முறையை ஒழித்து தொடக்க விவசாய கடன் சங்கங்கள் மூலம் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் முறையை கொண்டுவந்து விட்டோம்.

அதன்பிறகு பீகாரில் விவசாய கொள்முதல் அதிகரித்தே இருக்கிறது. குறைந்தபட்ச ஆதாரவிலை நீக்கப்படாது என்றும், கொள்முதல் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்றும் விவசாயிகளிடம் மத்திய அரசு விளக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து