முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் எதிரொலி : வாடிகன் நகர பிரபல தேவாலயத்தில் போப்பாண்டவர் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை

வெள்ளிக்கிழமை, 25 டிசம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ரோம் : நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இத்தாலியில் ஊரடங்கு உத்தரவுகளை மதித்து வழக்கமான நள்ளிரவு பிரார்த்தனை, சிறப்பு வழிபாட்டுக்குப் பதில் இரவு 7.30-க்கு பிரார்த்தனை நடந்தது.

உலகம் முழுவதுமுள்ள 130கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் போப் ஆண்டவர்.

கொரோனாவுக்கு 71,000 பேர் பலியானார்கள். 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. சமூக விலகலும் கடைப்பிடிக்கப்பட்டது. வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – கோலாகலம் – எழுச்சியைப் புரட்டிப் போட்டுவிட்டது கொரோனா.

கொரோனா எதிரொலியாக ஜெர்மனியில் பிரபல கிறிஸ்துவ சந்தைகளும், குவைத்தில் சர்ச்சகளும் ஜனவரி 10 வரை மூடப்பட்டிருக்கும்.

இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது மக்கள் வாடிகன் தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. நேற்றைய பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்தினர்.

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் நேற்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

வாடிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு கிறிஸ்து நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார்.

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடைமைகள் மீதான முடிவற்ற ஆசை மற்றும் இடைக்கால இன்பங்களைத் தொடராமல், நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்க வேண்டும்” என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து