முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைக்குள் வந்த ராணுவ வீரர் சீன ராணுவத்திடம் ஒப்படைப்பு

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

இந்திய எல்லைப்பகுதிக்குள் கடந்த 8–ம் தேதி வழிதவறி நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவம் நேற்று சீனாவிடம் ஒப்படைத்தது.

இந்தியாவில் எல்லைப் பிராந்தியமான லடாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. எல்லை பிரச்சினை காரணமாக எல்லையில் இரு நாடுகளும் கூடுதல் படைகளை குவித்துள்ளன. இதனிடையே இந்திய எல்லையான பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவர் வழிதவறி இந்திய பகுதியில் நுழைந்தார். இதனை கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் அந்த வீரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே இந்திய பகுதிக்குள் வழிதவறி வந்த தங்கள் நாட்டு வீரரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்த இந்திய ராணுவம் காணாமல் போன சீன வீரர் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரியிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர் சீன தரப்புக்கு அந்த வீரர் திருப்பி அனுப்பப்படுவார் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பல கட்ட விசாரணைக்குப் பிறகு இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரரை நேற்று காலை அந்நாட்டு ராணுவத்திடம் இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து