முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சுகாதார துறை செயலாளர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் 14 பேர் கோவேக்சின் தடுப்பூசியும், 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.  இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நான் பதிவு செய்திருந்தேன். அதற்காக நான் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கோவேக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். மருத்துவ துறையை சார்ந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முதல் கட்டமாக இந்த கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

மதுரையில் செயல்படுகின்ற கொரோனா தடுப்பூசி மையத்தில் அதிகப்படியாக 111 பேர் முதல் நாளன்று தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். இரண்டாவதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 100 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 166 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் 25, 60, 70 என்ற விகிதங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவை தடுக்க தடுப்பூசி முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசியை சென்னையில் அதிகமானோர் போட்டு வருகின்றனர். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசியை போடவைப்பதில்லை. இரண்டாவது அலையை தடுக்க இந்த கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக இருக்கும். இதுவரை தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து