முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவருடன் துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து