முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: மே 1 முதல் ஜூலை 13 வரை தடுப்பூசி போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் சிறப்பாக செயல்பட்டு அதிலிருந்து கூடுதலாக 5.88 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி திட்டம் பற்றி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தனது பதிலில் கூறியதாவது:– 

41 லட்சம் கூடுதல் டோஸ்கள் குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5.88 லட்சம் கூடுதல் டோஸ்கள் எடுக்க முடிந்தது. மேற்கு வங்கம் 4.87 லட்சமும், குஜராத் 4.62 லட்சம் கூடுதல் டோஸ்களையும் செலுத்தியுள்ளன. பீகாரில் அதிகபட்சமாக 1.26 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்டது. இது நாட்டில் வீணடிக்கப்பட்ட அளவில் பாதி.

வருகிற ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 135 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான ரூ.35,000 கோடி பட்ஜெட்டில், தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ. 8071 கோடி மற்றும் செயல்பாட்டு செலவு என இதுவரை ரூ.9725.15 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தொற்றுநோயின் மாறும் தன்மையினால் எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றி தற்போது எந்த காலக்கெடுவையும் குறிப்பிட முடியாது.

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய தாமதம் ஏற்படவில்லை. உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்டர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டது. 100.6 கோடி டோஸ் ஆர்டர்களில் 64.1 கோடி டோஸ்கள் கோவிஷீல்ட், 36.5 கோடி டோஸ்கள் கோவாக்சின் ஆகும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து