முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

வேலூர் : நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் வேலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என நினைத்து சில மாணவ, மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் மற்றொரு மாணவி நீட் தோல்வி அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சவுந்தர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வில் சரியாக எழுதவில்லை, இதனால் மதிப்பெண் குறையும் என்று தவறான எண்ணத்தால் மாணவி சவுந்தர்யா கடந்த சில நாட்களாக மிகுந்த விரக்தி மற்றும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.  

இந்நிலையில், மாணவி சவுந்தர்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து