எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி : இன்று 24-ம் தேதி முதல் ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம் கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஒரு வாரமாக தினமும் 2,000 சர்வ தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சர்வ தரிசன டிக்கெட்டுக்களை பெற பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:-
சர்வ தரிசன டோக்கன் பெற பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வரும் 25-ம் தேதி(நாளை) முதல் ஆன்லைனில் டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன்களை பெற்ற பக்தர்கள் 26-ம் தேதி சுவாமியை தரிசிக்கலாம். இந்த டோக்கன்கள் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை வழங்கப்படும். இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பக்தர்கள் அல்லது கொரோனா இல்லை எனும் சான்றிதழ் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இன்று 24-ம் தேதி முதல் ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


