எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ரிஷப் பண்டுக்கு பயிற்சியளித்த டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டுக்கு கீப்பிங் பயிற்சி கொடுத்துள்ளார். ஆட்டம் நடந்துக் கொண்டிருந்த போது பவுண்டரி லைனுக்கு பக்கமாக டோனி, பண்டுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான அமீரக ஆடுகளங்களில் கீப்பர் பண்டின் பணி கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. அதன் காரணமாக டோனி தனது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்ட ஆட்ட நுணுக்கங்களை பண்ட் உடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது. டி20 உலகக் கோப்பையின் முதல் எடிஷனை இந்தியா வெல்ல உதவியவர் அப்போதைய இந்திய கேப்டன் டோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.
_____________
பீல்டிங் பயிற்சியாளருக்கு
அபய் சர்மா விண்ணப்பம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். 20 ஓவர் உலக கோப்பையுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை. முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.
பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரவேற்று இருந்தது. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பித்து உள்ளார். அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் இருந்தார். அவரது பதவிக்கு அபய் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார். 52 வயதான அபய் இந்திய ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பொறுப்பு வகித்து உள்ளார். தேசிய பெண்கள் அணிக்கும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது. பயிற்சியாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3-ந்தேதி ஆகும்.
_____________
டி-20-ன் சில போட்டிகளை
தவிர்க்கும் வில்லியம்சன் !
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முழங்கையில் ஏற்பட்டுள்ள தொந்தரவு காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் சில போட்டிகளை மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் இருந்தார். அதே போல ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக கடைசி லீக் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வில்லியம்சன்னை முன்னெச்சரிக்கை ரீதியாக நாங்கள் களம் இறக்கவில்லை. அவருக்கு முறையான ஓய்வு இருந்தால் நிச்சயம் விளையாட தேறிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாக அவர் முதல் சில போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வாய்ப்புகள் உண்டு. வில்லியம்சன் பந்தை ஹிட் செய்வதில் அற்புதமான திறன் படைத்தவர். அதை செய்ய அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வளவு தான்” என பயிற்சியாளர் தெரிவித்தார்.
______________
காஷ்மீர் டி-20 அணியில்
இடம்பெற்ற உம்ரான்
ஐபிஎல் போட்டியில் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் பெற்ற இளம் வீரர் உம்ரான் மாலிக், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. இப்போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 150 கி.மீ.க்கும் அதிகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்தார் ஓர் இளம் இந்தியப் பந்துவீச்சாளர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த 21 வயது உம்ரான் மாலிக், ஆர்சிபி அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 2-வது அதிவேகப் பந்துவீச்சு அதுதான். (முதல் இடம் ஃபெர்குசனுக்கு - 153.63 கி.மீ.).
______________
ஐ.பி.எல் சூதாட்டத்தில்
ஈடுபட்ட 27 பேர் கைது
பெங்களூருவில் தனியார் விடுதியில் முகாமிட்டு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறியதாவது., கடந்த 15 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை கணிக்குமாறு ஆன்லைன் பந்தய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் பெங்களூருவில் 5 தனியார் விடுதிகளில் முகாமிட்டிருந்த 27 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 27 பேரையும் பிடித்து விசாரித்த தனிப்படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 78 லட்சம் ரொக்கப் பணம், 18 மடிக் கணிணிகள், இதர மின்னணு சாதனங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
_____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.