முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு 2 கோடி நெய் பாட்டில்கள் தயார்: ஆவின் நிர்வாகம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பொங்கலுக்கு மொத்தம் 2 கோடியே 15 லட்சம் 100 மி.லி நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழக முதல்வரின் உத்தரவுப் படியும், பால்வளத்துறை அமைச்சர் ஆலோசனைப்படியும் ஆவின் நிறுவனமானது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.  2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்ககைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை முதல்வர் அறிவித்துள்ளார்.

அதில் ஆவின் சார்பாக தயார் செய்யப்படும் நெய்யும் ஒன்றாகும். விவசாயிகள், கால் நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியையும் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பயன்படும் தொழிலாக கருதுகிறார்கள். இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் அதில் முதலிடம் பால்வளத்திற்குத்தான் உண்டு.  ஆவின் மூலம் தை திருநாளாம் பொங்கலுக்கு மொத்தம் 2 கோடியே 15 லட்சம் 100 மி.லி நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றது. ஆவின் நெய் விற்பனை மூலம் தோராயமாக ரூ. 135 கோடி வருமானம் கிடைக்கும்.  மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் அதாவது விவசாயிகள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவலை ஆவின் நிருவாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து