முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா மாநகராட்சி வார்டு தேர்தல்: வாக்குச்சாவடியில் நடந்த குண்டுவீச்சில் 3 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள (கே.எம்.சி) 144 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெற்றது. 4,959 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  நகரம் முழுவதும் சுமார் 23,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவியது. 

இதனிடையே, நேற்று காலை 11 மணியளவில் செல்டாஹ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் வாக்காளர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனக்கூறினர்.  இதையடுத்து குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இவ்விவகாரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து