முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை - துபாய் அரசு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

Source: provided

துபாய் : மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை என துபாய் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகள், மருத்துவ மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

துபாயில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. எனினும் அவர்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்க வேண்டும். எந்தவிதமான அறிகுறியும் இருக்கக்கூடாது. இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும். சரியான நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விதிமுறையானது கடந்த 20-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற  சுற்றறிக்கையினை அபுதாபி சுகாதாரத்துறையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து