முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பநிலை அதிகரிப்பு:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

புதுடில்லி: வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதை அடுத்து மின் தடை மின்வெடட்டு உள்ளிட்டவை ஏற்படாதவாறு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளுக்கான மின் விநியோகத்தில் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் சரும நோய்களுக்கு தடையற்ற சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கோடை வெப்பத்தின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து