முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாய் உணவை சாப்பிட்டால் ரூ. 5 லட்சம் சம்பளம் : இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு

சனிக்கிழமை, 21 மே 2022      உலகம்
Dog-food 2022-05-21

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் ஆம்னி என்ற நிறுவனம் தங்களுடைய உற்பத்தியான நாய் உணவை சுவைத்து அதுபற்றிய விவரங்களை தருவதற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் தருகிறது. இந்நிறுவனம் தாவர வகையிலான நாய் உணவை தயாரிக்கிறது. அந்த உணவு பொருட்களில் இனிப்பு உருளை கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்திருக்கும். 

இந்த வேலைக்கு, தேர்வு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை. எனினும், நாய் உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இதன்படி, 5 நாட்களுக்கு நாய் உணவை சாப்பிட வேண்டும்.

அதன் பின்னர், அவரது அனுபவம், உணவின் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்றில் உணவின் இயக்கம் உள்ளிட்டவற்றை எப்படி உணர்ந்தீர்கள்? என்பது பற்றிய விவரங்களை நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் என தெரிவித்து உள்ளது. 

இது பற்றி ஆம்னி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறும் போது, எங்களது தயாரிப்புகளை சுவைத்து பார்ப்பதற்காகவும், அவை எவ்வளவு சுவை வாய்ந்தது மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தாவரம் சார்ந்த உணவு என்று நிரூபிப்பதற்காகவும், நாங்கள் அதற்கான ஆட்களை பணிக்கு அமர்த்துகிறோம்.

இந்த ஆம்னி தயாரிப்புகளை நான் மற்றும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் கூட உண்போம். ஆனால், பிற நாய் உணவு தயாரிப்பு நிர்வாகிகள் பலர் அதனை செய்ய முடியாது என நாங்கள் உறுதி கூறுகிறோம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து