முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசை வெளியீட்டு விழாவில் வேதனையுடன் பேசிய பார்த்திபன்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      சினிமா
Parthiban 2022 06 13

Source: provided

ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசை பயண கொண்டாட்ட விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், சரத்குமார், ராதிகா மற்றும் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பார்த்திபன் ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என கூறினார்கள். இந்த விழாவிற்கு வருகை தர தமிழகத்தில் நான்கு நண்பர்கள் கிடைக்கவில்லை என பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இருந்தாலும் இந்த நிகழ்வுக்காக அவர் வந்துள்ளார் என பெருமிதம் கொண்டார். ஏ.ஆர் ரகுமான் பேசும்பொழுது, பார்த்திபன் 20 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் ஒரு கதை கூறினார். ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு பிறகும் பல கதைகளை கூறினார். ஆனால் இரவின் நிழல் படத்தின் கதை சொல்லி முடிப்பதற்குள்ளே இணைந்து பணியாற்றலாம் என கூறினேன். இது ஒரு லட்சிய திரைப்படம். என்றே ஏ.ஆர்.ரகுமான் கூறினார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இரவின் நிழல் படத்தின் பாடலை அபிஷேக் பச்சன் வெளியிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து