முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரோகித் விலகல் எதிரொலி; கேப்டனாக பும்ரா நியமனம்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      விளையாட்டு
Rohit-Sharma 2022 06 29

Source: provided

பர்மிங்காம் : இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகியதை அடுத்து அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

புதிய கேப்டனாக...

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும், அவர் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து