முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் இருந்து வரும் தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      தமிழகம்
Sri-Lanka 2022-07-05

Source: provided

சென்னை : பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து வாழ வழிதேடி தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனையில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் நேற்று தஞ்சை அடைந்துள்ளனர். முன்னதாக பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இதுவரை 96க்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்துள்ளனர். இலங்கையில் குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்து பொருட்கள் கிடைக்கவில்லை என்று இலங்கை அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தமிழ்நாடு அகதி களாக வந்துள்ள எங்களை ஆதரிக்கும் என்ற முழு நம்பிக்கையில் தான் இங்கு வந்துள்ளோம் என கண்ணீருடன் கூறினார். நேற்று அகதிகளாக வந்த 8 பேரையும் சேர்த்து இதுவரை இலங்கையிலிருந்து 104 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து