முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியின் போது விபத்தில் உயிரிழந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      தமிழகம்
CM-4 2022-07-06

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 3 கோடி பணியிடத்து விபத்து மரண நிவாரணத் தொகை வழங்கிடும் அடையாளமாக 7 நியமனதாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.  

தமிழக  அரசால்  கட்டுமான தொழில்களில் பணிபுரியும்  தொழிலாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்  தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலமாக வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீடு கட்டும் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டுமான பணியிடத்தில் விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம்  நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 30.04.2021 வரை பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் வாயிலாக ரூ. 5 லட்சம்  நிவாரணம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 60 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் 3 கோடி ரூபாய் நிவாரணத் தொகைக்கான ஆணைகள் நேற்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள்  நலவாரிய தலைவர் பொன்குமார்,  தலைமைச்செயலாளர் முனைவர்  இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின், முதன்மைச்செயலாளர் / தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து