முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி மாத பிறப்பு: திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ; புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. புரட்டாசி மாதத்தி

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      ஆன்மிகம்
thirupathi 2022 09 18

Source: provided

திருப்பதி ; புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  வரும் 27-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ம் தேதி வரை அங்கு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

நேற்று புரட்டாசி மாதம் பிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.  வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பினர். இலவச தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் 30 மணி நேரத்திற்கு மேலாக காத்து கிடந்து தரிசனம் செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து